கவிதைகள்
| பாலா அண்ணாவுக்கு ஒரு கண்ணீர் மடல்.! | |
பாலா அண்ணாவுக்குஒரு கண்ணீர் மடல் .! ஈழமாதா பெற்றெடுத்த தவப்புதல்வா ..! ஈழத்தமிழர் உருமைக்காக குரல் கொடுத்த ஏங்கள் தேசபிதாவே ..! பாலா அண்ணாவுக்கு அகிம்சைப் போராளியாய் முப்பதாண்டு காலம் எத்தனை காலனிடம் பட்டம் பதவி ஏப்படியய்யா .. காலக்கடிகாரம் அது வற்றிடமாய்த்தான் இருக்கும் பேச்சுவார்தை மேசையிலே விடுதலைப்பாதையின் நோயின் வலியை விட தலைவர் சூளுரைத்த பின்னர் |
ஈழம் அமைக்கலாம்…!
தாலட்ட யாரும் இல்லை
தாய் தேசம் அழுகிறது தோழா!
சீரட்டா யாருமின்றி
சிறு பிள்ளை அழுகிறது தோழா!
பாலூட்ட தாயுமில்லை
படுத்துறங்க வீடுமில்லைத் தோழா!
ஏர் பிடிக்க உழவனில்லை
எந்தையர்க்கு உணவுமில்லைத் தோழா! படித்திருக்கும் பள்ளியேலாம் குண்டு
பாராமல் போடுகிறார் தோழா!
வழித்துணைக்கு வந்தவரும்
விழி மூடித் தூங்குகிறார் தோழா!
வந்த வழி எது என்று தெரியாமல்
நின்று அமைதி பேச்சு முழிக்குதடா தோழா!
ஊரோடு வேரோடி –உன்
உறவுகளை காத்திடடா தோழா!
பாரோடு நீயும் பார்த்திருத்தல் நன்றோ
பதிலாவது கூறிடு தோழா!
வாளோடு களம் சென்றவன்
வம்சம் நாமடா தோழா!
வல்ல புலி சேனை இங்கே
வானிலும் வருகுது தோழா! –நீ
வசதியாய் வாழ்வதில்
அர்த்தம் என்னடா தோழா!?
விழி நீர் சிந்துகிறாள் தேசத் தாய்
பெற்றவன் நீ ஏன் மறந்தாய் தோழா!
சேய் தனுக்காய் ஒரு கூடு கட்டுகிறாள்
செத்தவன் போல் இருப்பதேனோ தோழா!
நேற்றுனை ஏற்றியே விமானம்
சென்றவர் இன்று இல்லை தோழா!
நோகும் அவர் உள்ளமதை –நீ
ஏனடா அறிய மறந்தாய் தோழா!
வெந்த புண்ணில் வேலாய்
எப்பிடி முடிகிறது உன்னால் தோழா!
நஞ்சை உண்டு மண் மானம்
காத்திடும் காலமுனதடா தோழா!
தமிழ் தலை வணங்காதென்று
நெஞ்சை நிமிர்த்து நீ சொல்லிடு தோழா!
நயவஞ்சகம் செய்வதை நிறுத்தியே
நாட்டினில் அன்பு வைத்திடு தோழா!
நாம் யாவரும் இணைந்தே
ஈழத்தை அமைக்கலாம் தோழா!
| தேசத்தின் குரல் பாலா அண்ணனுக்கு வீரவணக்கம். | |
|
MORE COMING SOON............
ஒரு புலம்பல்
மல்லி மல்லி மகே மல்லி மல்லி
மகிந்த நான் மனந்தளர்ந்தேனடா
மகிமையான சிந்தனை கொண்டு -நான்
மார் தட்டிக் கனாக்கண்டேனடா
மறைந்து யோடும் நிலை கண்டேன்
மானம் பறிபோய் மனது துடிக்குதடா
உற்றது துணையாய் உறவையும் இணைத்தேன்
உதவிக்காய் ஒரு சிலரையும் அழைத்தேன்
உண்மையை மறைக்கும் ரம்புவும் மௌனமானான்
உறன் பிறப்பே கோத்தா நீயும் மௌனமேன்
தேரர்களை தேடினாலும் காணவில்லையடா
வீரன் வம்சாவும் வீரவேசமும் ஓய்ந்ததாடா
தலையை வெளியே நீட்டத் தயக்கம் வருகதடா
தப்பிடுமோ தலையேனும் சந்தேகம் பிறக்குதடா
எம்மனுமெமக்கெதியோ எண்ணத்தோன்றுதடா
வானத்திலும் கூட வழிபறி போனதடா
வாய்ப்பேச்செல்லாம் வலுவற்று நிக்குதடா
கோழைத்தனமென குதர்க்கமாய் சொன்னேனடா
கோழை நீதானே;று கூறுகின்றதுலகமடா
எதிர்கால நிகழ்வும் எனக்கு புரியவில்லையடா
நிகழ்கால நடப்பும் நினைவிலில்லையடா
ஓராண்டு நிறைவு ஓடி மறைந்ததாடா
ஈராண்டு முடிவு…?...?...?
ஏன் நெஞ்சு பதறுதடா…
“புதிய புலிகளே” நன்றி…
வானேறினான் வானோடி
விண்ணேறினான் விந்தை தமிழ் மகன்
வாளெடுத்தன்று விரட்டினான் பகை
வான் சென்றும் அழைக்கின்றான் போருக்கு
வல்லமை பெற்றவன் வார்த்தையில்
வல்லமை நாட்டினான் புலி நாட்டினில்
எழுந்தது பகை என்றும்
விழுந்தது புலி என்றும்
புலம்பியே நின்றவர் யாவரும்
விழுந்தடித்தோடியே வியப்பாய் பேசிட
எழுந்தது வானில் புலிப்பறவை
நிலத்தினில் கொண்ட வெற்றியால்
நிஜத்தனை மறந்தவன் மனதினில்
நீங்காது நிலைத்தது ஏக்கம்
ஏளனமாய் எந்தையர் கூட
எள்ளி நகையாடியே பேசிட
எவனவனோ கிள்ளி விளையாடுகிறான்
சிங்களத்தை ஆய்வு கொண்டே
நேற்றும் அன்றும் நித்தமும் எங்கள்
முற்றத்தில் வீழ்ந்த குண்டு
போட்டவன் கூண்டில் வெடித்ததின்று
போர்கலை சொல்லியே
போற்றிடும் தலைவன் கொண்டோம்
போற்றுதற்குரிய போராளிகள் கண்டோம்
போதுமே புகைச்சல் மனதில்
பொங்கிடும் புலி வீரர் இதயம் தனிலே
இருந்திடும் தமிழீழம் ! இறுதியாய்
இலக்கு நோக்கியே
எழும் எழும் வானேறிகள்
ஏறும் இயந்திர பறவை எழும்
விழும் விழும் எந்தயர் மண்ணது
எம் கைகளில் விழும்
அழும் அழும் சிஙகளம் இனி அழும்
ஆழம் ஆழும் தமிழ் இனி ஆழும்
அமெரிக்காவும் அயல்நாடும் கூடவே
அணைத்துக்கொண்டு ஒப்பாரி வைக்கும்
ஓலங்களை உருவாக்கியவன் -எம்
மக்கள் அவலத்தில் ஆட்சி செய்பவன்
அலறியபடி அமைதி பேச அழைத்தாலும்
அதிலோன்றும் ஆச்சரியமில்லை...
நோக்கமாம் தமிழீழம் நேர்கியே
எம் படை நகரும்...
போரினில் புகுந்து புல்லரைக் கொன்று
புதிய சரித்திரம் படைக்கும் -என்
தேசத்து தலைவனின் பார்வையில்
உருவாகி உயிராகிய
"புதிய புலிகளே" நன்றி...
நன்றி,
‘‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’


பாலா அண்ணாவுக்கு
தேசத்தின் குரல் பாலா அண்ணா